Sunday, December 4, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - மொழிதல்

இங்கு வருவோருண்டு.
வந்து போவோருண்டு.
வருவோரிடமும், போவோரிடமும்
என்றும் கேட்டதில்லை
ஏனிங்கு வந்தீர் என்றோ
ஏனதற்குள் போகிறீர் என்றோ.
ஆனால் வருவோரும்
போவோரும் தவறாமல்
கேட்கிறார்
'ஏனிங்கு வந்தாய்?' என்று.
பதிலைச் சொன்னால்
இனி மேல் வாரார் என்பதற்கில்லை.
ஆனாலும் பதிலைச்
சொல்வதற்கில்லை.

No comments:

Post a Comment