Tuesday, November 22, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - பிரயத்தனம்

தலை நிறையப் பூச்சூடி
ஒவ்வாத சரிகைப் புடவையணிந்து
இடையை ஒடித்து
உடலை வளைத்து
உதட்டைக் கடித்து
நாக்கைச் சுளித்து
மார்பை விலக்கி
கண்களில் பொய் போதை காட்டி.
கண்ணகியாவதற்கு
காலமெல்லாம்
கதவுக்குப் பின்னாலிருந்தால்
போதுமென்பது நிதர்சனம்.
மாதவியாவதற்குத்தான்
எத்தனை பிரயத்தனம்.

No comments:

Post a Comment