என் முதல் கதையின் நாயகியான ஜிட்டக்கி நேற்று இறைவனடி சேர்ந்தார். அவருக்கு வயது 110.
எப்போதும் போல் படுக்கையில் விழுந்தவர்தான். காலையில் எழுந்து விடுவார் என்று தான் நினைத்திருந்தோம்.
ஆனால் எழுந்திருக்கவில்லை.
நூறு ஆண்டுகள் முழுமையாக வாழ்ந்திருக்கிறார். யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல்.
அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கப் போவதில்லை. அது தேவையுமில்லை.