Tuesday, July 26, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - 3 மூவர்

வந்தனர் மூவர் இன்று.
அதிலொருவன் இல்லை
திருப்தியென்று வாங்கிக்
கொண்டான் கொடுத்த பணத்தில்
பாதியை.

ஜாகையின் ஒழுகும் கூரையை
மாற்றிக் கொடுத்தவன்
வேண்டாம் பணம்
படுத்துத் தீர்த்துக் கொள்கிறேன்
என்று விட்டான்.

வாங்கிய கடனுக்கு
கட்ட வேண்டிய வட்டி போக
மிச்சப் பணத்தில்
இன்றிரவு நாலு இட்லி
நாளைக்கு
கவுளி வெத்திலை
சுருட்டு ரெண்டு
தீர்ந்து போன பாக்கெட் ஒன்று
மல்லி ஒரு முழம்
போக வர நான்கு
உண்டியலில் போட பத்து
போக மீதம்
ஒன்றுமில்லை.

எப்படியும் வரும் நாளை மாலை.
எப்படியும் வருவார்
எனக்காக மூவர்.