Wednesday, July 27, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் 4 - இன்று வரப்போகிறவர்

இங்கு வந்து
எத்தனை நாளானது இன்றோடு
என்பது நினைவில் இல்லை.

என் அறைக்கு
முதன் முதலாக வந்தவர்
முகமும்,பெயரும் நினைவில் இல்லை.

எத்தனை பேர்
என் அறைக்கு வந்திருப்பார்கள்
என்பதும் நினைவில் இல்லை.

எத்தனை பேர்
'எனக்கு இது முதல் முறை'
என்று சொன்னார்கள் என்பதும்
நினைவில் இல்லை

இன்றைக்கு
வரப் போகிறவர்
எப்படி இருப்பார் என்பது
தெரியவில்லை.

இது அவருக்கு
முதல் முறையா என்பதும்
தெரியவில்லை.

அப்படி இல்லை
எனும் பட்சத்தில்
என் அறைக்கு
வந்த முதல் ஆள்
அவராகக் கூட இருக்கலாம்.