Tuesday, July 26, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - 2 . விலாசம் கேட்டதற்கு

வேசி என்றார்கள்
விலைமகள் என்றார்கள்
நிறம் கறுப்பு,
வளைந்த தேகம்
தலையில் மல்லிகை
நிறத்திற்கொவ்வாத உதட்டுச் சாயம்
மல்லிகைப் பூ செண்ட் அவள் அடையாளம்
என்றார்கள்.
ஐந்து மணிக்கு வரும்
கவன்மேந்து பஸ்ஸில் பக்கத்து
டவுனுக்கு தொழிலுக்குப்
போவாள் என்றார்கள்.
பதினோரு மணிக்கு
கடைசி வண்டியில்
திரும்பி வருவாள் என்றார்கள்.

விலாசம் என்று திரும்பக் கேட்டதற்கு

ஊர் சாக்கடைகள் அனைத்தும் கூடும்
ஓரிடத்தில் அவள் வீடு என்றார்கள்.