Thursday, August 8, 2013

திருக்குரல்

அகால வேளையில் ஒலிக்கும்
அலைபேசியின் அதிர்வுச் சத்தம்.
அயர்ந்து உறங்குகையில்
கைக்கெட்டாத தூரத்தில் நின்று
ஒலிக்கும் அலாரத்தின் சத்தம்.
ஆடிமாத வெள்ளிக் கிழமைகளில்
அதிகாலை நேரத்தில் ஒலிக்கும்
அம்மன் பாடல்களின் சத்தம்.
மயிர் பிளக்கும் வெயிலில்
வியர்வை வடிய சிக்னலில்
காத்திருக்கையில் ஒலிக்கும்
வாகனங்களின் ஹாரன் சத்தம்.
இவையெல்லாம் நாராசம் என்பார்
தம் மழலையின் அகண்ட வாய்
அழுகைச் சத்தம் கேளாதார்.

No comments:

Post a Comment