Sunday, July 21, 2013

பேரழகி

ரயிலில் எதிர் இருக்கைப் பெண்.
அழகென்ன?
கண்கள் சொல்லும் கவிதை என்ன என்ன?
கூர் நாசி நெஞ்சைத் துளைப்பதென்ன?
செவ்விதழ்கள் தேனருந்த அழைப்பதென்ன?
காதோரம்  கருங்கற்றைக் குழலசைவதென்ன?
அவளதை ஜிமிக்கிகள் ஆட ஒதுக்கி அடக்குவதென்ன?
கழுத்தில்  மென் தங்கச் சங்கிலி புரள்வதென்ன?
அரைத்த சந்தன நிறத்திற்கேற்ப
அவளணிந்திருக்கும் உடையின் வனப்புதான் என்ன என்ன?
கால் மேல் காலிட்டு அமர்ந்திருக்கும் அலட்சியம்தான் என்ன என்ன?
இத்தனை என்ன என்னுள் ஓடிக்கொண்டிருக்க
வைதத கண் வாங்காமல் நான் அவளைப் பார்த்திருக்க
தன் செவ்வாயைத் திறந்து
கடைவாய்ப் பற்கள் தெரிய
ஆவென விட்டாள் ஒரு முழ நீளக் கொட்டாவி.
சூர்ப்பனகை தோற்றாள் போ !!!!.

No comments:

Post a Comment