Friday, August 31, 2012

பதிலுரைத்தல்

'டேய்..எங்கடா போனான்..ஐயோ..ராமா..முடியலடா பொவாக்கு'
'மொதல்ல ஒன்ன ஓதச்சா சரியாப் போகும்டா கேனக்கூதி..ஒத்த ஆயிர ரூவா நோட்ட எடுத்துக் குடுத்துப்போட்டு நேயப் புண்ட பேசுறியா..'
'நா என்னத்தடா கண்டேன்...இப்புடிப் பண்ணுவான்னு..உருண்டு போயி வந்திருந்தா கூட இன்னேரத்துக்கு
வந்திருக்கோணுமேடா..ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சு..ஆண்டவா'

ஒலிபெருக்கியில் அறிவிப்பு கேட்டது.

'நைக் நண்பர்கள் நடத்தும் முதலாம் ஆண்டு இறகுப் பந்து போட்டி..மின்னொளியில் மிகச் சிறப்பானதொரு முறையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....அடுத்து ஆடப் போகும் அணியினர்..யாரப்பா..பிபிசி அணி
சார்பாக பாபு,மணிகண்டன்..அப்புறம்..சுயேட்சை ஆட்டக்காரர்கள் பெருமாள், முருகேசன் என்கிற கோணவாய் முருகேசன்..உடனடியாக களத்திற்கு வரவும்'

'யார்ரா இது..'
'ராஜேந்திரண்டா'
'எந்த ராஜேந்திரன்'
'பொக்லீன் ராஜேந்திரன்'
 'அவனா..இதுக்கு முன்னாடி பேசிட்டிருந்தது'
'தெரியல...இன்னிக்கி அத்தன பேருக்கும் சிவராத்திரிதான்'

பொவாக்கு தம்பியும், கம்பளத்தான் முருகையனும் சுடுகாட்டில், ரங்கசாமி செட்டியார் சமாதியின் மேல் உட்கார்ந்திருந்தார்கள்.

ஒரு மணி நேரத்தில் ஆளுக்கு பத்து பீடியாவது புகைத்து விட்டார்கள்.

'இந்தத் தீவாளி நமக்கு தாண்டா..பெரிய நோம்பி..
' பெரிய ஆப்பா வெச்சிட்டானேடா பொவாக்கு'
'பொலம்பாதடா..வருவான்..போலீஸ் கெடுபிடி வேற..வண்டி பஞ்சர் கிஞ்சர் ஆயிப்போச்சோ என்னமோ'
'ஆயி போச்சோ..ஒன்னுக்கு போச்சோ..எவங்கண்டான்'

'சவுண்ட் சர்வீஸ்' மாரியப்பன் தள்ளாடியபடி வந்தான்.

'மாரிப்பனுக்கு தாண்டா நோம்பி..தாயோளி காலயிலிருந்து குடிச்சுட்டே இருக்கான்....'

'என்றா பொவாக்கு ..நோம்பி பலமாட்ருக்குது'
'மாரி..நக்கல் புண்ட பன்னிட்ருந்தியன்னா எட்டி மிதிச்சு போடுவேன்'
'ஏண்டா இப்ப நா என்றா கேட்டுப் போட்டேன்'
 பொவாக்கு தம்பி பதில் சொல்லவில்லை.பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான்.

'சரக்கு ஒன்னும் சரியில்லடா பொவாக்கு..ரெண்டு கோட்டர் குடிச்சாச்சு மப்பே ஏற மாட்டிங்கிது'
'மாரி இதுக்கு மேல எதுனா பேசுன..பாரு..நீ உக்காண்ட்ருக்குற சமாதியிலயே ஒன்ன பொதச்சு போடுவேன்'

'ஏண்டா முருகா..என்றா பொவாக்கு பயங்கர கோவத்துல இருப்பானாட்ருக்குது..'
'நானும் கோவத்துலதாண்டா இருக்கேன்..மூடிட்டு குடி'
'என்னாச்சுரா?" - கட்டிங்கை குடித்து விட்டு கனைத்துக் கொண்டான்.

' அந்தத் தாயோளி கிட்ட பணத்தக் குடுத்துப் போட்டு ரெண்டு பேரும் பொச்ச சொறிஞ்சுட்டு உக்காண்ட்ருக்குறோம்'
'யாரு கிட்ட குடுத்த?"
'தேக்கம்பட்டி சின்னசாமி கிட்ட..ஆயிர ரூவா நோட்டு..ஒரே நோட்டு..சலவ நோட்டு..வாங்கிட்டுப் போயி ஒரு மணி  நேரத்துக்கு மேல ஆச்சு..எங்க போனான்னே தெரியல...போன் பண்ணா தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்னு வருது..தொடுப்பு வீட்டுக்கு போயிட்டானோ என்னமோ'
'அப்ப சரக்கே அடிக்கிலியா'
'இல்லடா..மண்ட புண்ட எல்லாம் காஞ்சு போயி உக்காண்ட்ருக்குறோம்'
' அவன் கிட்ட எதுக்கு குடுத்த?"
'வண்டியில வந்தான்..சரி சுருக்கா வாங்கிட்டு வந்துருவான்னுட்டு குடுத்தேன்..சில்ற பண்ணிக் குடுக்கலாமுன்னு பாத்தா எல்லா கடையிலயும் தேர்க் கூட்டம்..சரின்னுட்டு குடுத்தேன்'

'பெருமாளும், முருகேசனும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..பிபிசி அணியினரின் அதிரடித் தாக்குதல்களை மிகத் தெளிவாக சமாளித்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்..'

'மிகத் தெளிவாக ஆடிக் கொண்டிருக்கிறார்களா? நாங்க மூனு பேருந்தான் கொஞ்ச நேரத்திக்கி முந்தி கெணத்துக்குப் பக்கத்தில ஒக்காந்து
ஆளுக்கொரு கோட்டர் குடிச்சோம்..அப்ப தெளிவாத்தான் ஆடுவாங்க' - சொல்லிவிட்டு மாரியப்பன் கெக்கெக் என்று சிரித்தான்.

மிச்சமிருந்த சரக்கை அடித்து விட்டு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு மாரியப்பன் கிளம்பினான்.

'டேய் பொவாக்கு..வா..அங்க போயி யாருக்கிட்டயாவது விசாரிக்கிலாம்.மணி ஒம்பாதாகப் போகுது.'
' இரு ஒரு பத்து நிமிசம் பாக்கலாம்'
'டேய் ஒரு வேள போலிஸ் கிட்ட சிக்கிட்டானோ என்னமோ?'
'சிக்கிருந்தா அவ்ளோதான்..அந்தத் தாயோளிங்க நோம்பி நாளதுவுமா வந்து நின்னுட்டு உயிர வாங்குறானுங்க'
'எங்க நிக்கிறாங்க?"
' இந்தப் பக்கம் சக்கரப் பேட்டரி கிட்ட..அந்தப் பக்கம் முடுக்கந்துற சுடுகாடு கிட்ட'
'சின்னசாமி குடிச்சிருந்தானா?"
' இல்ல ..பாத்தா அப்புடித் தெரியல...'

'மைதானத்தை அளந்து அளந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்..ஆட்டத்தில் அனல் பறக்கிறது'

'இந்தத் தாயோளி கிட்ட மைக்கக் குடுத்துட்டு பெரிய ரவுசுப் புண்டையா இருக்குது..அளந்து அளந்து ஆடுறாங்களாம்..குடிச்சுப் போட்டு ஆடுனா அளக்காம..கேனக்கூதி'

'ஏண்டா..ஒரு வேள குடிச்சுப் போட்டு அங்கியே ப்ளாட் ஆயிட்டானா?'
'அந்தளவுக்கு பெரிய குடிகாரனாடா அவன்...'
'ஒனக்குத் தெரியாது பொவாக்கு...ஆசனூர்ல அவம்பண்ண  கூத்த நீ பாத்திருந்தியன்னா தெரியும்...'
'இது எப்ப?'
..'.போனா அமாசைக்கி...ஏக ரவுசு பண்ணிப் போட்டான்...கேனப்புண்ட வரிசையே போட்றான்..சும்மா இர்ரான்னா...தாயோளி வரிச போட்றான்...போயி அவனப் படுக்க வச்சுட்டு வர்ரதுக்குள்ள நாக்கு தள்ளிப் போச்சு..அப்புறம் கொஞ்ச நேரங்கழிச்சுப் பாத்தா ஆளக் காணோம்..ஆளுக்கொரு பக்கம் தேட்றோம்..கடசீல பொதருக்குள்ள படுத்துட்ருக்குறான்'

மாரியப்பனும், கள்ளபார்ட் கவுண்டரும் தள்ளாடியபடி நடந்து வந்தார்கள்.

' என்னங் கவுண்டரே..நோம்பி பலமாட்ருக்குது'
'அவருக்கென்னடா..புள்ளயா..குட்டியா..மைனராட்டமா என்ன ஜபர்தஸ்து'
'இல்றா பொவாக்கு..ரெண்டு கோட்டர் குடிச்சேன்..மப்பு தரத்தட்டு மப்பு..வூட்டுக்குப் போனா உங்க அத்த கொன்னே போடுவா'
மாரியப்பன் இரண்டு டம்ளர்களில் க்வாட்டரை சரி பாதியாக பிரித்து ஊற்றினான்.
'கவுண்டரே..அடிச்சது போதாதா.."
'இல்றா பொவாக்கு ..பைனல் டச்..'
'பைனல் டச்? ' - பொவாக்கு தம்பி அவரையே வெறித்துப் பார்த்தான்.
'என்றா..கரண்ட்டு கம்பத்த நாய் பாத்த மாதிரி பாக்குற'
'அவனவனுக்கு கட்டிங்குக்கு வழியில்ல..உங்களுக்கு பைனல் டச் கேக்குதா?"
'என்றா ஆச்சு...?"
' சின்னசாமி கிட்ட பணத்த குடுத்துப் போட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல தேவுடு காத்துட்ருக்குறாங்க'
'கவுண்டரே..இந்தக் கதய திரும்ப என்னால சொல்ல முடியாது...பணமிருந்தா ஒரு நூறு ரூவா கொடுங்க'
'அத்த கிட்ட எரநூறு வாங்குனேன்..தீத்துப் போட்டேன்...கையில சல்லி பைசா இல்ல'
'டேய் மாரி..உங்கிட்ட இருந்தா குட்றா...'
'முருகா...சத்தியமா மொதல்ல குடிச்ச கோட்டர் மட்டுந்தான் எங்காசு...இதெல்லாம் மத்தவங்க வாங்கிக் குடுத்ததுதான்..
பெருமாளும், முருகேசனும் இந்த ஆட்டத்துல ஜெயிச்சா ஒரு கோட்டர் வாங்கித்தர்றான்னாங்க..அதிய வேணா குடுக்கறேன்'
'அந்தத் தாயோளிங்க குடிச்சு போட்டு ஆடுறானுங்க..ஜெயிச்சா மாரிதான்'

அந்த நேரம் பார்த்து ஜமுக்காளக் கவுண்டர் தவ்வி தவ்வி வந்தார்.

'அப்பா...ஆண்டவா..தெய்வம் குறுக்க வருதுடா..பொவாக்கு..கவுண்டரே பணமிருந்தா ஒரு நூறு குடுங்க'
'ஏண்டா..ஒரு பத்து நிமிசத்துக்கு முன்னாடி கேக்கப்படாது?
'கேட்ருந்தா எரநூறு ரூவாயா குடுத்திருப்பீங்களா?"
'ஐநூறா குடுத்திருப்பேன்.'
'பத்து நிமிசத்துக்கு முன்னாடி யாருக்கு குடுத்தீங்க?"
'சின்னசாமி கிட்ட'
'யாருகிட்ட...?"
'சின்னசாமிடா..நம்ப தேக்கம்பட்டி சின்னசாமிக்கி'
'அவங்கிட்டயா..? அந்த தெட்டுப்பட்ட தேவிடியாப் பையந்தான் எங்ககிட்ட ஆயிர ரூவா நோட்ட வாங்கிட்டு மொந்த வாழப்பழம் குடுத்துட்டு போயிட்டான்..இப்ப எங்க அவன்?"
'பத்து நிமிசத்துக்கு முன்னாடி மேட்டுப்பாளயம் வண்டி ஏறிப் போனான்'
'எங்க?"
'எங்கியா? மேட்டுப்பாளயத்துக்குத்தான்...மாமனார் வூட்டுக்குப் போறான்னு சொல்லிட்டு போனான்'
'பொவாக்கு...கடப்பாறய எடுத்து வாயில சொருகிட்டாண்டா'
'டேய் முருகா..டென்சன் ஆகாத...இந்த வண்டி பவானிசாகர்ல கா மணி நேரம் டிப்பன் பண்றதுக்கு நிக்கும்.இப்ப போய் சேந்திருக்கும்..நாம வண்டி இருந்தா வாய்க்கா மேட்டுல வுட்டு கோடேபாளயம் பிரிவுல டிச்சிரலாம்..புண்டவாயா..
கையில சிக்கட்டும்..ங்கோயாள ஓக்க'
'டேய் ...ஏகப்பட்ட வண்டிய புடிச்சிட்டாங்க...யாரு வண்டி குடுப்பாங்க'
' என்ற வண்டிய எடுத்துட்டுப் போங்கடா' - கள்ளபார்ட் கவுண்டர் போதையில் குளறினார்.
'வண்டி எங்க?"
'அக்கட்ட?"
'அக்கட்டயின்னா? எங்க?"
'ரோட்டுக்கு அக்கட்ட'
முருகையனும், பொவாக்கு தம்பியும் சிறுத்தை மாதிரி சீறிப் பாய்ந்தார்கள்.

மளிகைக் கடையின் முன் அவருடைய டிவிஎஸ் எக்ஸெல் வண்டி நின்றிருந்தது.

பொவாக்கு தம்பி என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் எனத் தெரியாமல் கிக்கரை மிதிக்க ஆரம்பித்தான். வண்டி ஸ்டார்ட் ஆகிற வழியைக் காணோம்.

'தள்றா' என்று பொவாக்கை ஓரங்கட்டிவிட்டு முருகையன் கிக்கரை மிதிக்க ஆரம்பித்தான்.

'என்னடா..ஸ்டார்ட் ஆக மாட்டிங்கிது..கவுண்டரு அவருக்கு ஊத்திட்டு வண்டிக்கு பெட்றோல் போட மறந்துட்டாரா?"

'டேய் முருகா..வண்டியில  சாவி இல்லடா'
'ங்கோயாள..'
இருவரும் திரும்பவும் சுடுகாட்டுக்கு விரைந்தார்கள்.
கள்ளபார்ட் மட்டையாகிவிட்டார்.

எழுப்பினார்கள். 'ம்..ம்ம்' என்று முனகினார்.

'கவுண்டரே...சாவி குடுங்க'
'சாவியா? என்ன சாவி?"
'வண்டி சாவி'
' எந்த வண்டி சாவி?"
'உங்க வண்டி சாவி தான்'
' அதுவா..அது..எங்க வச்சேன்னு தெரியலயே..அது...' - குளறியபடி பட்டாபட்டியில் கை விட்டுத் துழாவினார்.
'டேய்..சாவிய ஆட்டம் நடக்குற எடத்துல யாருகிட்டயோ குடுத்தேன்..'
'யாரு கிட்ட குடுத்தீங்க?"
'யாருகிட்ட? ஞாயவகம் வர மாட்டீங்கிது..சாவிய மப்புல தொலச்சுப் போடுவேன்னு யாரு கிட்டயோ குடுத்தேன்'

இருவரும் திரும்பவும் சிறுத்தை மாதிரி சீறினார்கள்.

பொக்லீன் ராஜேந்திரன் வர்ணனை செய்து கொண்டிருந்தான்.

'ஆட்டம் மிக நெருக்கமான கட்டத்திற்கு வந்து விட்டது..இரு அணியினரும் சளைக்காமல் ஆடிக் கொண்...."

'டிருக்கிறார்கள்" என்பதை அவன் முடிக்கும் முன்னரே பொவாக்கு அவன் கையில் இருந்த மைக்கை பிடுங்கி அறிவிப்பு செய்ய ஆரம்பித்தான்.

'அன்பார்ந்த பெரியோர்களே ! கள்ளபார்ட் கவுண்டர் தன்னுடைய வண்டி சாவியை இங்கே தான் யாரிடமோ கொடுத்தார் என்று
சொல்கிறார். யாரிடம் கொடுத்தார் என்று அவருக்குத் தெரியவில்லை. தெரியும் நிலையிலும் அவர் இல்லை. ஆகவே சாவியை
வாங்கியவர் யாராக இருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்'

ராஜேந்திரன் புதுப் பெண்சாதியை யாரோ கையைப் பிடித்து இழுத்தது போல கொதித்து மைக்கை பொவாக்கு தம்பியிடம் இருந்து பிடுங்கினான்.

கரியன் அவர்களை நோக்கி வந்தான்.

'டேய் பொவாக்கு..அவரு டோபாஸ் கிட்டதான் சாவியக் குடுத்தாரு'
'அவனெங்கே?"
"மப்பு எச்சாப் போச்சுன்னு கொஞ்ச நேரத்துக்கு முந்திதா வூட்டுக்குப் போனான்"

மறுபடியும் சிறுத்தைப் பாய்ச்சல்.

டோபாஸ் தங்கவேலுவின் வீட்டுக்குப் போனார்கள்.
' என்ன பொவாக்கு?" - மனைவி கேட்டாள்.
' எங்க அவன்?"
' ஏம் பொவாக்கு..எதுனா பிரச்சினையா?"
'அதெல்லாம் ஒண்ணுமில்ல...எங்க அவன்?"
' உள்ள தூங்கிட்ருக்காரு'

விரைந்து சென்று எழுப்பினார்கள்.
அவனும் தன் பங்குக்கு குளறினான்.

' டேய் டோபாஸ்..கள்ளபார்ட் கவுண்டர் உங்கிட்ட அவரு வண்டி சாவியக் குடுத்தாராமா..எங்கடா சாவி?"

அவன் போதையில் தலையை வரட்டு வரட்டென்று சொறிந்தான்.

'அதுவா?..அத சின்னசாமி கிட்ட குடுத்தேன்?"
'எந்த சின்னசாமி?"
'தேக்கம்பட்டி சின்னசாமி கிட்ட"

இருவரும் ஒரு வார்த்தை பேசாமல் வீட்டை விட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

இறகுப்பந்து போட்டி மைதானத்தை தாண்டி திரும்பவும் சுடுகாட்டுக்கு நடந்தார்கள்.

பொவாக்கு தம்பி சட்டைப்பையை துழாவினான். பீடி இல்லை.

சவுண்ட் சர்வீஸ் மாரியப்பன் ரோட்டை அளந்து கொண்டு வந்தான்.

இருவரையும் குறுக்காட்டி நிறுத்தினான்.

'டேய் பொவாக்கு...பெருமாளும், முருகேசனும் ஆடுனாங்களே..ஜெயிச்சாங்களா?"

'ஊம்புனாங்க" என்று பொவாக்கு கத்தியது , ஒலிபெருக்கியில் ஒலித்த பொக்லீன் ராஜேந்திரனின் வெண்கலக் குரலையும் தாண்டி எதிரொலித்தது.